செப்டெம்பர் 21இற்கு பின் இலங்கையில் கடுமையாகிறதா கட்டுப்பாடுகள்?
செப்டெம்பர் 13ஆம் திகதி வரையில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை செப்டெம்பர் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நீடிப்பதற்காக அறிவிப்பு நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் 21ஆம் திகதிக்கு பின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படுமாயின், எவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது தொடர்பில் அறிக்கை தயாரிக்குமாறு இலங்கை ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் 100 மாணவர்களிலும் குறைவான எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை திறப்பது தொடர்பிலும் நேற்றைய தினம் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,