சட்டங்களை மீறி கைது நடவடிக்கை! முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் அரசு - ஐ.தே.க. காட்டம்
நாட்டில் சட்ட ஏற்பாடுகளை மீறி கைது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்பவர்களை கைது செய்யும் அளவுக்கு அரசு பயந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையவழி மூலம் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசுக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரிக்கும் போது, சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பவர்கள் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.
பொதுமக்கள் போலித் தகவல்களைக் கதைப்பதைக் காரணம் காட்டி, குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய முடியாது.
இன்னொரு இனக் குழு தொடர்பாக வெறுப்புப் பேச்சுக்களை வெளியிடும்போதே கைதுசெய்ய
முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
