கிளிநொச்சியில் காடுகளை வெட்டி காணி பிடிக்கப்படுகிறதா..! உரிமையாளர் கூறியுள்ள விடயம்

Kilinochchi Sri Lanka Sri Lankan Peoples
By Suliyan Mar 05, 2024 06:30 AM GMT
Report

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணி பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ள நிலையில் குறித்த காணி உரிமையாளர் இது தொடர்பில் எமது ஊடகத்திற்கு தெளிப்படுத்தலொன்றை வழங்கியுள்ளார்.

காணி உரிமையாளரான அவுஸ்திரேலியாவை தற்போதைய வதிவிடமாக கொண்ட செல்வச்சந்திரன் கார்த்திகேசு கூறுகையில், இக்காணியானது எனக்கு சொந்தமானது. எனது 7 தலைமுறையின் சொத்தும் ஆகும், இதனை பலவருட யுத்தம் காரணமாக எமக்கு சென்று பராமரிக்கவோ அல்லது அதனை வேறு விவசாய வேலைகளுக்கு எடுக்கவோ முடியாமல் போனதனால், இலங்கை அரசாங்கம் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குக் கீழ் கொண்டு வந்ததுள்ளனர்.

நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இதன்பின் நான் இலங்கைக்கு வந்து சட்டரீதியான ஆவணங்களை சமர்ப்பித்து எனக்கு சொந்தமான காணி என வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன், இக்காணியினை சுத்தம் செய்வதற்கு ஒருகுழுவினரை நியமித்துள்ளேன்.

இது சட்டவிரோத காடழிப்பு என சொல்ல முடியாது, எனக்கு சொந்தமானதொரு காணி என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு பொருந்தக்கூடிய ஆவணங்கள் சிலவற்றினையும் எமது செய்திசேவை உறுதிப்படுத்தலுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

யுக்திய நடவடிக்கை குறித்து சாமிர பெரேரா வெளியிட்டுள்ள தகவல்

யுக்திய நடவடிக்கை குறித்து சாமிர பெரேரா வெளியிட்டுள்ள தகவல்

இதுபற்றி வனப்பாதுகாப்பு திணைக்களத்தை தொடர்புகொண்டபோது, அவர் சமர்ப்பித்த கடிதத்திற்கு இன்னும் வனப்பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கவில்லை எனவும் சட்டரீதியான வழக்கும் முடிவுபெறவில்லை எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்: மத்திய வங்கியின் தலைவர்களுக்கு அவசர அறிவிப்பு

இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்: மத்திய வங்கியின் தலைவர்களுக்கு அவசர அறிவிப்பு

முதலாம் இணைப்பு

கிளிநொச்சி - பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணி பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஆனையிறவுக்கும் இயக்கச்சிக்கும் இடையில் ஏ9 வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள காட்டுப்பகுதியில் இயந்திர உபகரணங்கள் மூலம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி பல ஏக்கர் பரப்பளவில் காணிகளை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயக்கச்சியில் பலரையும் வியக்க வைக்கும் ஒரு தமிழனின் முயற்சி!

இயக்கச்சியில் பலரையும் வியக்க வைக்கும் ஒரு தமிழனின் முயற்சி!

பொது மக்களது கோரிக்கை

இந்த பிரதேசத்திற்கு அருகில் இராணுவ முகாம் ஒன்றும் இருக்கிறது. இது தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், பளை பொலிஸார், கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு  கொண்டு சென்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் காடுகளை வெட்டி காணி பிடிக்கப்படுகிறதா..! உரிமையாளர் கூறியுள்ள விடயம் | Palai Iyakakatchi Deforestation And Land Grabbing

எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று  தெரிவிக்கும் பொது மக்கள் தாம்  காடுகளை வெட்டுகின்ற சிலரிடம் சென்று விசாரித்த போது அவர்கள் பதிலளிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

எனவே உரிய தரப்பினர் குறித்த காடழிப்பு விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் காடுகளை வெட்டி காணி பிடிக்கப்படுகிறதா..! உரிமையாளர் கூறியுள்ள விடயம் | Palai Iyakakatchi Deforestation And Land Grabbing

முல்லைத்தீவில் காணாமல் போயுள்ள முக்கிய வழக்கின் சாட்சிய இளைஞன்

முல்லைத்தீவில் காணாமல் போயுள்ள முக்கிய வழக்கின் சாட்சிய இளைஞன்

சாந்தனின் இறுதி சடங்கு தொடர்பான அறிவித்தல் வெளியானது

சாந்தனின் இறுதி சடங்கு தொடர்பான அறிவித்தல் வெளியானது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US