பாகிஸ்தான் ஆதரவு வட்ஸ்எப் குழு: தமிழ் நாட்டில் விசாரணை ஆரம்பம்
பாகிஸ்தான் புகழ்பாடி, 'வட்ஸ்எப்' குழுவில் தகவல் பரப்பிய, தமிழகத்தை சேர்ந்த 30 பேர் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இவர்கள் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களா என்ற அடிப்படையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
விசாரணை
கோவை, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு அதிகாரிகள், இந்த விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலா பயணியர் 26 பேரை, ஏப்ரல் மாதம் 22ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தினர், 'ஒப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் என்ற இடங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
ஒப்பரேஷன் சிந்தூர்
இதன் போதே, 'ஒப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு எதிராகவும், பாகிஸ்தான் புகழ்பாடி, 'வட்ஸ்எப் ' குழுக்களில் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
அவர்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள, எப்.ஐ., எனப்படும், 'பொப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' தீவிரவாத ஆதரவு அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
