போர் பதற்றத்தின் உச்சம்! முழுமையான போருக்கு தயாராகும் பாகிஸ்தான்
இந்தியாவின் சமீபத்திய தாக்குதல் இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான "மோதலை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை" குறிக்கிறது என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்
ஆனால் இஸ்லாமாபாத் ஒரு முழுமையான போரை "தவிர்க்க முயற்சிக்கிறது" என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் தெளிவான பாதுகாப்பு மீறல் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் சுட்டிக்காட்டியுள்ளார்.
விரிவுபடுத்தப்பட்ட தாக்குதல்
இந்நிலையில் குறித்த மோதலை விரிவுபடுத்துவதற்கான அழைப்பு, மேலும் அதை பிராந்தியத்திற்கு மிகவும் பரந்ததாகவும் மிகவும் ஆபத்தானதாகவும் மாற்றக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகின் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட இடங்களில் ஒன்றில் பல தசாப்தங்களாக பதட்டங்கள் நிலவியதைத் தொடர்ந்து, இந்தியா இந்த வாரம் தாக்குதல் சடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவம் முழுமையான போருக்கு தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் ஆயுதப் படைகள் ஏவுகணைகளை வீசி ஐந்து இந்திய போர் விமானங்களை வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
இது பாகிஸ்தானால் இந்தியாவுக்கு பாகிஸ்தானால் வழங்கப்பட்ட "பொருத்தமான பாடம்" என்று கூறப்படுகிறது.
மேலும் மூன்று விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை இந்தியா ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது, என்று ஆசிப் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
