உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் குற்றம் சுமத்துகின்றது பெப்ரல் அமைப்பு
அரசாங்க செய்தித் தொடர்பாளரின் சில அறிக்கைகளால் தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பலவீனமடைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் தற்போதைய சூழ்நிலையில், 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற வாய்ப்பில்லை என்றும் பெப்ரல் அமைப்பு ( PAFFREL) தெரிவித்துள்ளது
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி,
மக்களின் ஜனநாயக உரிமை
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும்.
நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காத வகையில் அரசாங்கம் செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தீர்மானங்களைப் புறக்கணிக்கும் நிலை வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை என தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் ''தேர்தலை நடத்துவது மக்களின் ஜனநாயக உரிமை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா'' என்பதே தற்போதைய கவலைக்குரிய கேள்வியாகும் என்றும் ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 4 மணி நேரம் முன்

சாலையில் நடந்த கோர சம்பவம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார் News Lankasri

மகனை தூங்கவிடாமல் 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாட வைத்த தந்தை! இப்படியும் தண்டனை வழங்கலாமா? News Lankasri
