இலங்கையில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்
இலங்கை நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவரான தீபால் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்
கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமான சரிவைக் கண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தப் போக்கு நாட்டின் எதிர்காலத்திற்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளைக் கவனித்ததில் நாட்டில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2013ஆம் ஆண்டில், 350,000 பிறப்புகள் நிகழ்ந்தன. 2024 ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 228,000 ஆகக் குறைந்துள்ளது.
நோய் நிலைமைகள்
அத்துடன், தற்போது குழந்தைகளில் பலர் பல்வேறு நோய்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள், இது 20 ஆண்டுகளுக்கு முன்னர், காணாத ஒரு சூழ்நிலை என்று தீபால் பெரேரா கூறியுள்ளார்.
அதேநேரம், குழந்தை பருவ நீரிழிவு, புற்றுநோய் மற்றும் மனநல கோளாறுகள் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தைகள் இந்த விகிதத்தில் நோய்வாய்ப்பட்டால், எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக இருக்காது என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தாவிட்டால், நாட்டில் அனைவரும் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவரான தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
