நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ரணில்: பி.எஸ்.எம். சார்ள்ஸ்
நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்ததுடன் சவால்களைத் தனி நபராக எதிர்கொண்டு நாட்டை மாற்றியமைத்த சிறந்த தலைவர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil wickremesinghe) என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இன்று (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சிறந்த தலைவர்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"யாழ். பல்கலைக்கழகத்துக்கான பாரிய மைல்கல் நிகழ்வாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது.
நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த இந்த கட்டடத் தொகுதியை விரைவில் திறந்து, பயன்பாட்டுக்கு வழங்குமாறு கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியிம் கோரிக்கை விடுத்தேன்.
கோரிக்கையை ஏற்று, மே மாதம் கட்டடம் திறக்கப்படும் என அவர் கூறினார். அதன் பின்னர் ஒரு தடவை கூட இது தொடர்பில் பேசவில்லை.
எனினும், வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி இந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார். இதுவே தலைமைத்துவத்துக்கான சிறந்த வெளிப்பாடு என்பதுடன் சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம் இதுவே.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் எமது ஜனாதிபதி.
அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரம் இன்றி நாடு இருளுக்குள் கிடந்தபோது, தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்று சவால்களை அவர் வெற்றிகொண்டார்.
பல சவால்களைத் தனி நபராக எதிர்கொண்டு, நாட்டை அவர் மாற்றியமைத்தார்.
இவ்வாறான ஜனாதிபதியின் பிரதிநிதியாக வடக்கில் ஆளுநராக சேவையாற்றுவதில் பெருமிதம் அடைகின்றேன்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
