ரணிலினாலேயே நாட்டை கட்டியெழுப்ப முடியும்: ஐ.தே.கட்சியின் யாழ் அமைப்பாளர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே வெற்றிபெறுவார் என்றும் அவரினாலேயே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.தீவக அமைப்பாளர் சுவாமிநாதன் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சுயேட்சை வேட்பாளர்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மத, இன பேதங்கள் கடந்த ஒரு தலைவராக 50 வருடங்கள் தனது அரசியல் வாழ்க்கையை ரணில் விக்ரமசிங்க கழித்துள்ளார்.
இந்நிலையில், அவர் தனது நாட்டின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் தனது கட்சியை விட்டு சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார்.
எனவே, எமது உணர்வுகளை புரிந்து கொண்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது வாக்குகளை அளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
