கட்சிக்கு தெரியாமல் சஜித்திற்கு எழுதிக் கொடுத்த சுமந்திரனால் வெடித்த புதிய சர்ச்சை
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஒருபகுதியை இலங்கைத் தமிழரசுக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எழுதி கொடுத்து தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தேர்தலில் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த தீர்மானம், முதலில், அக்கட்சியின் முக்கியஸ்தர்களின் பங்கேற்பு இல்லாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் எடுக்கப்பட்டது. இதன்போது கட்சியின் தலைவர் உட்பட பலர் இந்த தீர்மானம் தொடர்பில் தெளிவின்மையை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து, பல சர்ச்சைகள் எழுந்தன. இதற்கிடையில், தமிழரசு கட்சியின் தேர்தல் குறித்த இறுதி தீர்மானமானது, ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்த பின்னரே அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
இதற்கிடையில், சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தானே எழுதியதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ள நிலையில், முதலிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதிலும் மக்கள் மத்தியில் ஒரு நாடகம் நடத்தப்பட்டுள்ளதா என்னும் கேள்வி எழுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலனுடனான ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
