ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள்

London Ranil Wickremesinghe Crime
By Amal Jan 22, 2025 10:51 PM GMT
Report

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஜனவரி மாத இறுதியில் லண்டனுக்கு (London) விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக கைது உத்தரவை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயமானது ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது.

1980களின் பிற்பகுதியில், குறிப்பாக பட்டலந்த சித்திரவதைக் கூடங்களுடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் விக்ரமசிங்க ஈடுபட்டதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

யாழில் பொலிஸாரால் இரு பெண்கள் கைது

யாழில் பொலிஸாரால் இரு பெண்கள் கைது

கைது உத்தரவுக்கான முயற்சி

இந்தநிலையில் அவருக்கு எதிரான கைது உத்தரவுக்கான முயற்சி, உலகளாவிய அதிகார வரம்பு என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்று குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள் | Organizations Trying To Arrest Ranil In London

சித்திரவதை போன்ற கடுமையான சர்வதேச குற்றங்களை தனிநபர்கள், எங்கு மேற்கொண்டிருந்தாலும், இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில், அவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கும் ஒரு சட்டக் கோட்பாடாக இது அமைந்துள்ளது.

இந்த நடவடிக்கை, முன்னாள் சிலி சர்வாதிகாரி அகஸ்டோ பினோசேவின் வழக்குடன் இணையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது ஆட்சியின் குற்றங்களுக்காக அவர் 1998 இல் லண்டனில் உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பருத்தித்துறை வாள்வெட்டு சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

பருத்தித்துறை வாள்வெட்டு சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

குற்றச்சாட்டு

குறிப்பாக, உலகத் தலைவர்களை அவர்களின் பதவிக்காலத்தில் செய்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்க வைப்பதில் இந்த உலகளாவிய அதிகார வரம்பு சட்டம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கு அருகிலுள்ள பியகம தொகுதியில் அமைந்துள்ள பட்டலந்த தடுப்பு மையம், இலங்கையின் 1987–1989 மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கிளர்ச்சியின் போது பேசப்பட்ட ஒன்றாக இருந்தது.

ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள் | Organizations Trying To Arrest Ranil In London

அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை கிளர்ச்சியை வழிநடத்திய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் குழுவான ஜே.வி.பி.யுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவோரை தடுத்து வைக்க, விசாரிக்க மற்றும் சித்திரவதை செய்ய இலங்கை பொலிஸின் நாசவேலை எதிர்ப் பிரிவு, இந்த முகாமை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

எனினும் இந்த குற்றச்சாட்டில் அப்போதைய அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க, தம்மீதான நேரடி குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபானசாலைக்கு எதிராக விளக்குமாறுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

மதுபானசாலைக்கு எதிராக விளக்குமாறுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US