மதுபானசாலைக்கு எதிராக விளக்குமாறுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
அம்பாறை(Ampara)-நீலாவணை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஒன்றுகூடி விளக்குமாறு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது நேற்றையதினம்(21) இடம்பெற்றுள்ளது.
பொதுமக்கள் போராட்டம்
பொது மக்கள் விளக்குமாறுகளை ஏந்தி பல்வேறு பதாதைகளுடன் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாங்கள் போராட்டம் மேற்கொண்ட போது அன்று திறக்கப்பட இருந்த மதுபான சாலையை அப்பொழுது மூடினார்கள்.
ஆனால் இப்பொழுது மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடு நடைபெறுகிறது. எனவே எங்களுக்கு இவ்வாறான மதுபானசாலை வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.
போராட்டம் நிறைவு
பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜிடம் மனு ஒன்றினை வழங்கிய பின்னர் போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் கோரிக்கையை ஏற்று பெரிய நீலாவணை மதுபானசாலை திறக்க அரசு அனுமதிக்க கூடாது என நேற்று(21) நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் வலியுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam