திருகோணமலையில் இயற்கை விவசாய உணவுப் பாதுகாப்பு உற்பத்தித் திட்டம்
திருகோணமலை (Trincomalee) வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு போஷாக்கு மட்டத்தை அதிகரிக்கும் இயற்கை விவசாய உணவுப் பாதுகாப்பு உற்பத்தித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு போஷாக்கு மட்டத்தை அதிகரிக்கும் இயற்கை விவசாய உணவுப் பாதுகாப்பு உற்பத்தித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ.திலீப்குமார் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், பெரும்போகச் செய்கைக் காலத்தை கருத்திற் கொண்டு தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய விவசாயக் குடும்பங்களுக்கு கத்தரி, வெண்டி, பயற்றை, பீர்க்கு, புடோல், கறிமிளகாய், மிளகாய், உள்ளிட்ட 10 வகையான குறுகிய கால பயன்தரும் பயிர் விதைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மரக்கறி விதைகள்
“ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான பல்துறை அணுகுமுறைகள் மூலம் குழந்தைகளை மையப்படுத்திய முழுமையான அணுகுமுறை” எனும் செயற்திட்டம் தெருச்சிறார்கள் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் பங்காண்மையுடன் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் நடைமுறைபடுத்தப்படுகிறது.
பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை 30.08.2024 இடம்பெற்ற ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலங்கைத்துறை, கறுக்காமுனை, கல்லடி, பூநகர், மாவடிச்சேனை ஆகிய கிராமங்களிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சுமார் 150 வீட்டுத் தோட்ட செய்கையாளர் குடும்பங்கள் மரக்கறி விதைகளைப் பெற்றுக் கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |