தேர்தலில் தமிழர்களிடையே பிளவு : இந்திய ஊடகம் எடுத்துரைப்பு
இலங்கையின் ஏமாற்றமடைந்த தமிழர்கள் இந்த தேர்தலில் பிளவுபட்டுள்ளனர் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று கருத்துரைத்துள்ளது.
நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள கோரிக்கைகள் தொடர்பாக தென்னிலங்கைத் தலைமையுடனான ஏமாற்றம் மற்றும் பிளவுபட்ட தமிழ் அரசியல் என்பன அவர்களை வெவ்வேறு தெரிவுகளைக் கருத்தில் கொள்ள வழிவகுத்துள்ளதாக குறித்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் வடபகுதி தமிழ் வாக்காளர்கள், போரினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அடுத்தடுத்த அரசாங்கங்களின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று கூறுகின்றனர்.
ஒவ்வொரு தமிழ் வாக்காளர்கள்
இதற்கிடையில், நீதி மற்றும் அரசியல் தீர்வுக்கான அவர்களின் கோரிக்கைகளும் தொடர்கின்றன. இந்தநிலையில் இலங்கையின் வடபகுதி தமிழ் வாக்காளர்கள், இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய ஒரு வேட்பாளருக்கும் நிச்சயமாக தோற்கக்கூடிய ஒருவருக்கும் இடையில் இரண்டு பிரிவுகளாக மாறியுள்ளனர்.

தமிழர்களில் சிலர், சிங்கள வேட்பாளர்களில் முன்னணியில் உள்ள ஒருவருக்கு ஆதரவளித்து வரும் நிலையில், சிலர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர்.
இலங்கையின் தேர்தல் வரைபடத்தின் இலக்கண யதார்த்தத்தின் அடிப்படையில், இலங்கை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கை தளமாகக் கொண்ட சில அரசியல் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் கூட்டாக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனால் வெற்றிபெற முடியாது என்பது ஒவ்வொரு தமிழ் வாக்காளருக்கும் நன்றாகத் தெரியும்.
எனினும் தங்கள் குறைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே தமிழ் பொதுவேட்பாளரை தமிழ் வாக்காளர்கள் ஆதரிப்பதாக இந்திய நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri