இலங்கையை உலுக்கிய அக்குரேகொட சம்பவம் - வாகனத்தின் உரிமையாளர் அட்டாளைச்சேனை சேர்ந்தவர்..!
அக்குரேகொட தாக்கலுக்கு பயன்படுத்ததாக கூறப்படும் வாகனத்தினது என சந்தேகிக்கப்படும் உரிமத் தகடு மூலம் அட்டாளைச்சேனையை சேர்ந்த நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அக்குரேகொட சம்பவத்தை விசாரிக்க 12 சிறப்பு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குழுக்களில் சிறப்புப் பணிக்குழு, குற்றப் புலனாய்வுத்துறை , சிறப்புப் பிரிவு, கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் தென் மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு அர்ப்பணிப்புள்ள பிரிவுகள் ஆகியவை அடங்கும்.
நள்ளிரவில் பற்றி எரிந்த கார் - கொழும்பை உலுக்கிய இரட்டைக்கொலையில் சிஐடியினருக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்
கொலைக்கான நோக்கம்
நாங்கள் இதற்கு முன்பு அனைத்து துறைகளிலிருந்தும் 12 பொலிஸ் குழுக்களை ஒரே நேரத்தில் அனுப்பியதில்லை, இந்த நிலைமை எங்களுக்கும் ஒரு பிரச்சினையாக உள்ளது. கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். கொலைக்கான நோக்கம் குறித்த தகவல்களைக் கண்டறிய நாங்கள் தீவிரமாக முயற்சித்து வருகிறோம்.

தாக்குதல் நடத்தியவர்களின் வாகனத்தைக் கண்காணிக்கும் சி.சி.டி.வி காட்சிகள் உள்ளிட்ட தொழிநுட்ப ஆதாரங்களை முதற்கட்ட விசாரணைகள் பெரிதும் நம்பியுள்ளன. அதிகாரிகள், தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தின் உரிமத் தகடு மூலம் அதன் உரிமையாளரை அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் சம்பவத்திற்கு முன்பே வாகனத்தை விற்றுவிட்டதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த உரிமைச் சங்கிலியைச் சரிபார்த்து, குற்றத்திற்கு முன்னும் பின்னும் வாகனத்தின் நகர்வுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam