இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழில் ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் சேவை
அனலைதீவு பிரதேச மக்களுக்கான ஆலோசனை சேவை வழங்கலும் நடமாடும் சேவையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழப்பாண அலுவலக ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சேவைகள், நேற்றையதினம் (29.08.2024) ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட, அனலைத்தீவு பிரதேசத்தில் நடாத்தப்பட்டது.
1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக தாபிக்கப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது தலைமை காரியாலயம் மற்றும் 10 பிராந்திய அலுவலகங்களையும் சில உப அலுவலகங்ளையும் கொண்டுள்ளது.
நோக்கங்கள்
எனவே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சேவைகளை தீவுப் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கும் நோக்குடனும், ஏனைய நிறுவனங்களின் சேவைகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்குடனும், முறைப்பாடுகள் மேற்கொள்வதில் மக்களுக்கு உள்ள இடர்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடனும் இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் சேவையில் ஊர்காவற்றுறை பிரதே செயலாளர் மஞ்சுளா சதீசன் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சர்வதேச
விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி கபிலன் விவ்லவராஜன் ஆகியோர்
கலந்துக்கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |