தொழில் துறை விருத்தி தொடர்பாக ஒரு நாள் செயலமர்வு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனுசரணையுடன் தொழில் துறை விருத்தி மற்றும் நிலைத்து நிற்றல் தொடர்பாக ஒரு நாள் செயலமர்வானது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்று மீளநாடு திரும்பி சுயதொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நபர்களுக்காக இடம்பெற்றது.
குறித்த தெளிவூட்டல் நிகழ்வானது தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளரின் வழிகாட்குதலுக்கிணங்க நடைபெற்றது.
இதன்போது தொழில் ஒன்றினை தெரிவு செய்யும் முறை, அதனை கையாளும் விதம் மற்றும் போட்டி சந்தையில் நிலைத்திருக்கும் முறை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
அத்துடன் பொதுமக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலும் வளவாளர்களால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதில் வளவாளர்களாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவின் மாவட்ட இணைப்பாளர், இவ்வமைச்சின் பயிற்சி பிரிவின் பொறுப்பாளர் மற்றும் கந்தளாய், தம்பலகாமம் பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.