தேசபந்துவிற்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான கட்டளைகள்
இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சட்டத்தினை கையில் எடுத்துக்கொண்டாரா என்ற கேள்வியை சிலத்தரப்புக்கள் அரசாங்கத்திடம் வினவியுள்ளன.
அவர் நீதிமன்ற கட்டளையை மீறி பல நாட்கள் வெளிவராமையை இது மேற்கோள் காட்டுகிறது. தேசப்பந்துவை கைது செய்யுங்கள் என்ற நீதிமன்றின் பிடியானைக்கு பிறகு தலைமறைவான அவர், இறுதியாக நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கடந்த 2023ம் ஆண்டு வெலிகம, பெலேன பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்தார்.
இந்நிலையில் மாத்தறை நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தான் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் எழுத்தாணையொன்றை கோரி ரிட் மனுவொன்றை தாக்கல் செய்த தேசபந்து தென்னகோன், அது நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மாத்தறை நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஊடாக சரணடைந்திருந்தார்.
இந்நிலையில் தேசபந்துவிற்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான கட்டளைகள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...,
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam