தலைமன்னாரில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Indian fishermen Mannar
By Ashik Mar 21, 2024 03:01 PM GMT
Report

தலைமன்னார் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 7 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை இன்று (21.03.2024 ) மன்னார் நீதவான் பிறப்பித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பினுல் நேற்று(20) இரவு அத்துமீறி நுழைந்து 2 படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்ட 7 இந்தியகடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைத்தனர்.

அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இலங்கை பொலிஸாருக்கு வந்துள்ள தைரியம்

அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இலங்கை பொலிஸாருக்கு வந்துள்ள தைரியம்

கடற்படையினரின் விசாரணைகள்

இந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதோடு, கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த கடற்றொழிலாளர்களை இன்று (21) மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

தலைமன்னாரில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு | Order To Detain Indian Fishermen

இதன் போது விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் நீதவான் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை எதிர்வரம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அதிகரிக்கும் நாட்டின் டொலர் கையிருப்பு : நன்மைகள் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

அதிகரிக்கும் நாட்டின் டொலர் கையிருப்பு : நன்மைகள் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

மேலும், யாழ்ப்பாணம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 25 கடற்றொழிலாளர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை அடுத்த மாதம் ஏப்ரல் 5 திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து வருகைத்தந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், மூன்று படகுகளையும் அதிலிருந்து 25 கடற்றொழிலாளர்ர்களையும் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 25 கடற்றொழிலாளர்களும் ஊர்காவற்துறை நீதிமன்று விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - ராகேஸ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US