அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இலங்கை பொலிஸாருக்கு வந்துள்ள தைரியம்

Sri Lanka Police Mahinda Yapa Abeywardena Uthaya Gammanpila Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Benat Mar 21, 2024 01:26 PM GMT
Report

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவை அமைச்சர் ஒருவரை கைது செய்ய பொலிஸாருக்கு தைரியம் வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சிரேஷ்ட அரசியல்வாதி என்ற நன்மதிப்பை பெற்றிருந்தார். 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை தொடர்ந்து சபாநாயகர் பதவிக்கான தெரிவு இடம்பெற்ற போது எதிர்க்கட்சியினர் சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தனவை நியமிக்க ஆதரவு வழங்கினார்கள்.

எதிர்க்கட்சியினர் வைத்த நம்பிக்கையை அவர் பாதுகாக்கவில்லை. இதனால் தான் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்துள்ளார்கள்.

அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இலங்கை பொலிஸாருக்கு வந்துள்ள தைரியம் | Kehaliya Was Arrested And Imprisoned

நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ஆளும் தரப்பினர் 'சபாநாயகர் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை மீறவில்லை,சபாநாயகர் சரி என்பதால் தான் உயர் நீதிமன்றம் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரித்துள்ளது, இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

எம்மிடம் பெரும்பான்மை உள்ளது. ஆகவே நாங்கள் சபாநாயகரை பாதுகாப்போம் என்று தன்னிச்சையாக குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.

நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் குழுநிலை வேளையின் போது சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.

தவறுகளை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் சுட்டிக் காட்டினோம்.ஆனால் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. இதன் பெறுபேறே இன்று நம்பிக்கையில்லா பிரேரணையாக வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது என்பதால் தான் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது. உலக நாடுகளில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டதன் பின்னர் அதன் அரசியலமைப்பு இயங்கு நிலை தொடர்பில் ஆராய நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு.

அதிகரிக்கும் நாட்டின் டொலர் கையிருப்பு : நன்மைகள் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

அதிகரிக்கும் நாட்டின் டொலர் கையிருப்பு : நன்மைகள் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

ஆனால் இலங்கையில் அந்த நிலைமை கிடையாது. சபாநாயகர் பதவி வகிப்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமான முறையில் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அரசியலமைப்பின் 80 ஆவது உறுப்புரை நீக்கப்பட்டு அந்த அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை மாத்திரமல்ல, அரசியலமைப்பின் நம்பிக்கையையும் இல்லாதொழித்துள்ளார்.

பெரும்பான்மை எம்மிடம் உள்ளது என்று ஆளும் தரப்பு தன்னிச்சையாக செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவையும் அரசாங்கம் பாதுகாத்தது. கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது நாடாளுமன்றத்தில் பல விடயங்கள் பேசப்பட்டன. 

மக்கள் அதனை உன்னிப்பாக ஆராய்ந்தார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவை அமைச்சர் ஒருவரை கைது செய்ய பொலிஸாருக்கு தைரியம் வந்துள்ளது.

நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட்டு இன்று கெஹெலிய ரம்புக்வெல்லவை சிறையில் அடைத்துள்ளது.ஆகவே பெரும்பான்மை எப்போதும் வெற்றிப் பெறாது.

பெரும்பான்மை பலத்தை கொண்டு தவறுகளை தொடர்ந்து மூடி மறைத்தால் மக்கள் வன்முறையை கையில் எடுப்பார்கள்.ஆகவே ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் தரப்பினர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

280 ரூபாவாகும் டொலரின் பெறுமதி..! அடுத்த வருடத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

280 ரூபாவாகும் டொலரின் பெறுமதி..! அடுத்த வருடத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US