ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவரை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு அடுத்த சில வாரங்களில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துமாறு சுகாதாரப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் தடுப்பூசி நிலையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதைத் துரிதப்படுத்து மாறும், ஒவ்வொரு பிரிவிலும் பல புதிய தடுப்பூசி நிலையங்களை இணைக்குமாறும் பிராந்திய மருத்துவ அதிகாரி அலுவலகங்களால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri