இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை - பிரதமர் மஹிந்தவின் அதிரடி உத்தரவு
நாட்டில் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவு குறைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கி, அவற்றுக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அதற்கான தீர்வுகளை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சில இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் தொழில் துறையையும் அதனால் ஏற்றுமதி பொருளாதாரத்தையும் பாதிக்கும் என தொழில்சார் வல்லுநர்கள் அண்மையில் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் அதற்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார் என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam
