நுவரெலியா மாவட்டத்திற்கு வருவோருக்கான அவசர அறிவித்தல்! பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
வெளி இடங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு வருகைத் தருவோரை உடனடியாக திருப்பி அனுப்புமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட(Nandana Galabada) குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தில் கோவிட் தொற்று மற்றும் உயிரிழப்பு வீதம் என்பன தற்போது குறைவடைந்து வருகின்றன.
இந்நிலையில், பிற மாகாணங்களிலிருந்து நுவரெலியாவிற்கு வருபவர்கள் ஊடாக மீண்டும் கோவிட் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இதனைத் தடுக்கும் முகமாகவே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.