வரவுசெலவு திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் எதிரணிகள்!
ஜனாதிபதி அநுர திசாநாயக்க சமர்ப்பித்த வரவுசெலவு திட்டத்தை எதிர்கட்சிகள் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஆளும் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க(Mahinda Jayasinghe) முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
முப்பது ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட மிகவும் நேர்மறையான வரவுசெலவு திட்டம் இதுவாகும்.
வரவுசெலவு திட்டம்
சிலர் பாசாங்குத்தனத்தால் இந்த வரவுசெலவு திட்டத்தை விமர்சிக்கின்றனர். பொருளாதார ஆய்வாளர்கள் இது குறித்து நேர்மறையான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

இந்த வரவுசெலவு திட்டம் நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
ஆறு தசாப்தங்களாக உற்பத்திப் பொருளாதாரம் சரிந்ததற்குப் பதிலாக, கிராமப்புற வறுமையை ஒழிக்கும் உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நகரும் வரவுசெலவு திட்டத்தை நாங்கள் முன்வைத்துள்ளோம்.
சம்பள உயர்வு
நமது வெற்றிகரமான வரவுசெலவு திட்டம் நிலைத்தன்மையற்றதாக இருப்பதற்கு எதிரணிகளின் பாசாங்குத்தனமே காரணம்.

சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வு ஒரு அரசு ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளில் ஒரு அரசு ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் எந்த அதிகரிப்பும் இல்லை” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan