இலங்கையின் திட்டமிடலை ஆதரிக்கும் எண்ணம் இல்லை: சுவிட்ஸர்லாந்து அதிரடி

Ranil Wickremesinghe Sri Lankan political crisis Switzerland
By Sivaa Mayuri Mar 02, 2024 09:00 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான புதிய ஆணைக்குழுவை ஆதரிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்று சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, சுவிட்ஸர்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஃபேபியன் மோலினா, எழுப்பிய கேள்வியின்போது இந்த பதிலை சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான புதிய வழிமுறைகளை ஸ்தாபித்தல் தொடர்பாக இலங்கையுடன் சுவிஸ் அரசாங்கத்தின் ஈடுபாடு குறித்தே சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஃபேபியன் மோலினா இந்தக கேள்வியை எழுப்பினார்.

நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்

நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்

பொறுப்புக்கூறல் பொறிமுறை

சுவிஸ் அரசாங்கத்தின் கூற்றுப்படி, முன்னதாக இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகம், தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பானிய தூதரகங்களுடன் இணைந்து, ரணில் விக்ரமசிங்கவிடம் நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்மொழிவுகளின் பட்டியலை முன்வைத்துள்ளது.

இலங்கையின் திட்டமிடலை ஆதரிக்கும் எண்ணம் இல்லை: சுவிட்ஸர்லாந்து அதிரடி | Opposition To Sl S Reconciliation Commission

அத்துடன் இலங்கை சிறைகளில் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் சித்திரவதைக்கு உள்ளவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கும் மனித உரிமை அமைப்புகளை சுவிட்சர்லாந்து ஆதரிக்கிறது என்றும் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு தமது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதுடன், எதிர்காலத்தில் சாத்தியமான பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்காக இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகளின் "இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்துடன்" ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இலங்கையின் இடைக்கால செயலகம் அண்மையில் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் பிரதான பிக்குகளிடம் நல்லிணக்க சட்டமூலத்தை முன்வைத்தது.

இலங்கையின் திட்டமிடலை ஆதரிக்கும் எண்ணம் இல்லை: சுவிட்ஸர்லாந்து அதிரடி | Opposition To Sl S Reconciliation Commission

இந்த சட்டமூலம் தமிழர் உணர்வுகளை கணக்கில் கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையிலேயே, பௌத்த மதகுருமார்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

சம்பள உயர்வை இரத்து செய்யும் விவகாரம்: பெரும் குழப்பத்தில் நாடாளுமன்றம்

சம்பள உயர்வை இரத்து செய்யும் விவகாரம்: பெரும் குழப்பத்தில் நாடாளுமன்றம்

நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணைக்குழு 

எனினும் தமிழர்கள் சட்டமூலத்தை நிராகரித்து சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை கோரியுள்ளனர்.

இந்தநிலையில் உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணைக்குழு நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்றும் மனித உரிமைகள் பேரவையின் ஆய்வுகளைத் திசைதிருப்பும் சட்டமியற்றும் சூழ்ச்சியாகத் தோன்றுகிறது என்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணையகமும் கூறியுள்ளது.

இலங்கையின் திட்டமிடலை ஆதரிக்கும் எண்ணம் இல்லை: சுவிட்ஸர்லாந்து அதிரடி | Opposition To Sl S Reconciliation Commission

இதேவேளை நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவளிப்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த சுவிட்சர்லாந்து அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதைக் கண்டித்ததுடன், இலங்கையுடனான இருதரப்பு சந்திப்புகளில் அது குறித்து கலந்துரையாடுவதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சுவிட்ஸர்லாந்தின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவில் இடம்பெற்றுள்ள ஃபேபியன் மோலினா, தாயகத்தில் உள்ள தமிழர்களைக் கலந்தாலோசிகாத "ஹிமாலய பிரகடனத்திற்கு" சுவிட்சர்லாந்தின் ஆதரவு தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

இதன்போது புலம்பெயர் பிரதிநிதிகள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு இடையிலான உரையாடல் மேடை மற்றும் பிரகடனத்திற்கு வழிவகுத்த விசாகா தர்மதாசவின் "போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கத்திற்கு" தமது வெளிவிவகார அமைச்சு நிதியுதவி வழங்கியுள்ளதாக சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

நீதிமன்றில் வணங்கி மன்னிப்புக் கோரிய துணைப் பொலிஸ் பரிசோதகர்

நீதிமன்றில் வணங்கி மன்னிப்புக் கோரிய துணைப் பொலிஸ் பரிசோதகர்

புகலிடக் கோரிக்கை

அதேநேரம், பிரகடனத்தின் முடிவில் இருந்து விலகியிருந்ததாகவும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் திட்டமிடலை ஆதரிக்கும் எண்ணம் இல்லை: சுவிட்ஸர்லாந்து அதிரடி | Opposition To Sl S Reconciliation Commission

இலங்கையில் சித்திரவதைகள் மற்றும் தடுப்புக் காவலில் மரணங்கள் பற்றிய புதிய அறிக்கைகள் இருந்தபோதிலும், தனிநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் விடயத்தில், புகலிடக் கோரிக்கைகள் அனைத்தும் தனித்தனியாக ஆராயப்படுவதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 2023 இல், 61 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்,மேலும் 21 பேர் தாமாக முன்வந்து சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறினர் என்றும் சுவிஸ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US