ஜனாதிபதியின் ஏமாற்று வேலை: கையொப்பம் பெறும் நடவடிக்கைக்கு எழுந்துள்ள எதிர்ப்பு

Ranil Wickremesinghe Sri Lanka Politician Prasanna Ranatunga Sri Lankan political crisis
By Chandramathi Sep 19, 2022 09:52 AM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும், பயங்கரவாதச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்த போதிலும், பயங்கரவாதச் சட்டத்தை நீக்கி, அதன் கீழ் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய முடியாது என அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழித்து நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பை வழங்கத் தேவையில்லை” என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் தேவை

ஜனாதிபதியின் ஏமாற்று வேலை: கையொப்பம் பெறும் நடவடிக்கைக்கு எழுந்துள்ள எதிர்ப்பு | Opposition To President Fraudulent Signature Move

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,“சிறைகளில் உள்ள பயங்கரவாதிகளை விடுவிக்க முடியாது. பயங்கரவாதிகள் மற்றும் போராட்டக்காரர்களை ஒடுக்க பயங்கரவாத தடைச்சட்டம் இருக்க வேண்டும்.

இந்த சட்டமூலத்தை இல்லாதொழிக்க வடக்கில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்துப் போராட்டத்திற்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.  மாநாட்டை அடிப்படையாக வைத்து நாடு முழுவதும் செல்ல ஆரம்பித்துள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை.”என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஏமாற்று வேலை

ஜனாதிபதியின் ஏமாற்று வேலை: கையொப்பம் பெறும் நடவடிக்கைக்கு எழுந்துள்ள எதிர்ப்பு | Opposition To President Fraudulent Signature Move

காங்கேசன்துறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப்பெறும் நடவடிக்கை வவுனியாவை சென்றடைந்துள்ளது.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் அரசியல் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மற்றுமொரு ஏமாற்று வேலை என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட போதும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதுவும் செய்யப்படவில்லை.

தேசிய கைதிகள் தினத்திற்காக 417 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர், ஆனால் ஒரு தமிழ் அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படவில்லை.

ஜனாதிபதியின் வாக்குறுதியினால் நாற்பத்தாறு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்பார்த்தனர், அதுவும் ஏமாற்று வேலையே என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கையொப்பம் பெறும் பிரச்சாரம்

ஜனாதிபதியின் ஏமாற்று வேலை: கையொப்பம் பெறும் நடவடிக்கைக்கு எழுந்துள்ள எதிர்ப்பு | Opposition To President Fraudulent Signature Move

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 தமிழ் கைதிகள் தம் விடுதலைக்காக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் 10 நாட்களைக் கடந்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் 6 பேரின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது உறவினர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில், பயங்கரவாதச் சட்டத்தை இல்லாதொழிக்கக் கோரி இலங்கை தமிழரசு கட்சி இளைஞர் முன்னணி வடக்கில் காங்கேசன்துறையில் இருந்து தெற்கில் ஹம்பாந்தோட்டைக்கு கையொப்பம் பெறும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது.      

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US