பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்ட ஊர்தி வவுனியாவை அடைந்தது
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கக்கோரிய ஊர்திவழி கையழுத்து போராட்டம் இன்றையதினம் (18.09) வவுனியாவை வந்தடைந்தது.
இலங்கை தழிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மற்றும் , சர்வஜன நீதி அமைப்பு இணைந்து முன்னெடுத்து வரும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் வவுனியாவிலும் முன்னெடுக்கப்பட்டது.

காலை 10 மணியளவில் வவுனியா தமிழரசுகட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கையெழுத்து போராட்டம், நகரின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதி்ராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.


முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri