நுவரெலியா ஹக்கல பூங்கா திறப்பது தொடர்பான அறிவிப்பு
ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா நேற்று (25.12.2025) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்களின்படி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பான அறிவிப்பு
பூங்காவில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகள், நுழைவாயிலுக்கு அருகிலுள்ள குளம் மற்றும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ள பூங்காவிற்குச் செல்லும் வீதி போன்ற பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹக்கல தாவரவியல் பூங்காவை மீண்டும் திறப்பதற்கான, குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பில் பூங்கா அதிகாரிகளுக்கு பொருத்தமான அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய என்ட்ரியால் ஷாக்கில் அண்ணாமலை குடும்பம்... மனோஜ் மாட்டிக்கொண்டாரா? Cineulagam
இங்கிலாந்து அணியின் மது அருந்தும் கலாச்சாரம் குறித்த குற்றச்சாட்டு: பென் ஸ்டோக்ஸ் பதிலடி News Lankasri