ஒபெக் பிளஸ் அமைப்பு மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்
பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான 'ஒபெக் பிளஸ்' எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாளொன்றுக்கு சுமார் 1,88,000 பெரல்கள் வரை மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உற்பத்திக் கூட்டலுக்குப் பிறகு, இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கு உற்பத்தியை மேலும் உயர்த்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சவூதி அரேபியா, ரஷ்யா, ஈராக், குவைத், அல்ஜீரியா, கஜகஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய 7 முக்கிய உறுப்பு நாடுகள் இந்த உற்பத்திக் குறைப்புத் திரும்பப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
மசகு எண்ணெய் உற்பத்தி
ஈரானிய மற்றும் உக்ரைன் போர் காரணமாகக் வளைகுடா பகுதிகள், ரஷ்யா மற்றும் கஜகஸ்தானில் இருந்து ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தன்னார்வ உற்பத்திக் குறைப்பை நிறைவு செய்யும் வகையில் இந்த நடவடிக்கை அமைகிறது.

அடுத்த கட்டமாக உறுப்பு நாடுகளின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை மதிப்பாய்வு செய்யும் பணியில் ஒபெக் பிளஸ் ஈடுபட்டுள்ளது.
ஈராக் போன்ற சில உறுப்பு நாடுகள் தங்களின் உயர் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப அதிக ஒதுக்கீட்டைப் பெற முயற்சி செய்து வருவதால், உற்பத்தியைப் பகிர்ந்தளிப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வரை இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் தொடரும் எனக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam