பதவி விலகல் குறித்து ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும்! - நிமல் சிறிபால டி சில்வா
பதவியில் இருக்கும் ஜனாதிபதியை பதவி நீக்கம் அல்லது பதவி விலகல் மூலம் மாத்திரமே பதவி நீக்க முடியும் என முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்புக்கு மாற்று எதுவும் இல்லை எனவும், மக்கள் எதிர்ப்பு காரணமாக ஒரு ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பதவி விலகுவதா இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை கூறியுள்ளார்.
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri