அத்தியாவசியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்
கோவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக மிகவும் அத்தியாவசியமான வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
மிகவும் அத்தியாவசியமான வழக்குகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வழக்கு விசாரணைகளையும் ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதிமன்றங்கள் மிகக் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் அத்தியாவசிய பணிகளை மட்டும் முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களின் செயற்பாடுகளும் வரையறுக்கப்பட்டிருக்கும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.