ஜெனிவாவில் இலங்கைக்கு காத்திருக்கும் கடும் நெருக்கடி!: தப்பிப் பிழைக்குமா
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் முன்வைத்துள்ள யோசனை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கைக்கு 11 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என ஜெனிவா இராஜதந்திர தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கைக்கு எதிராக 22 முதல் 24 வாக்குகள் கிடைக்கலாம்

அத்துடன் இலங்கைக்கு எதிராக 22 முதல் 24 வாக்குகள் கிடைக்கும் வாய்ப்புள்ளதுடன் 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாது எனவும் தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன. இம்முறை அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள யோசனைக்கு மேலதிகமாக மனித உரிமை ஆணையாளர் இலங்கை சம்பந்தமாக முன்வைத்துள்ள அறிக்கையிலும் கடுமையான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
யோசனைகளின் பிரதான பரிந்துரைகள்

இலங்கையின் பாதுகாப்பு செலவுகளை குறைத்தல், வடக்கு, கிழக்கில் இராணுவத்தை குறைத்தல், பொருளாதார குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல் உட்பட பல பிரதான பரிந்துரைகள் அவற்றில் அடங்கும்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான யோசனை சம்பந்தமான வாக்கெடுப்பு எதிர்வரும் 4 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு இடையில் ஒரு நாள் நடைபெறவுள்ளது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri