மூதூரை உலுக்கிய படுகொலை: பொலிஸார் விசாரணை தீவிரம்
மூதூரில்(Mutur) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு குழுவினரால் இன்று அதிகாலை மேற்படி நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மூதூர், ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறங்குதுறைப் பகுதியிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
[AGA9SVL ]
பொலிஸார் விசாரணை
இறங்குதுறைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஈச்சலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
