மூதூரை உலுக்கிய படுகொலை: பொலிஸார் விசாரணை தீவிரம்
மூதூரில்(Mutur) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு குழுவினரால் இன்று அதிகாலை மேற்படி நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மூதூர், ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறங்குதுறைப் பகுதியிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
[AGA9SVL ]
பொலிஸார் விசாரணை
இறங்குதுறைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஈச்சலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
