கெஹெலிய தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Kehalia Rambukwella) பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (3.4.2024) மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு மேல் நீதிமன்றம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு (colombo) மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |