வவுனியாவில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட நிலையில் ஒருவர் பலி (video)
வவுனியா - மெனிக்பாம் பகுதியில் உள்ள புகையிரத கடவையினை கடக்க முயன்ற குடும்பஸ்தர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (04.11.2022) பதிவாகியுள்ளது.
செட்டிகுளம் - துடரிக்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மோகனதாஸ் (வயது 55) என்ற குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தொடருந்துடன் மோதுண்டு பலி
செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து விவசாய காணியினை பார்வையிடுவதற்காக மெனிக்பாம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது குறித்த பகுதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட நிலையில் தொடருந்துடன் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பறையனாலங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri