வவுனியாவில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட நிலையில் ஒருவர் பலி (video)
வவுனியா - மெனிக்பாம் பகுதியில் உள்ள புகையிரத கடவையினை கடக்க முயன்ற குடும்பஸ்தர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (04.11.2022) பதிவாகியுள்ளது.
செட்டிகுளம் - துடரிக்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மோகனதாஸ் (வயது 55) என்ற குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தொடருந்துடன் மோதுண்டு பலி
செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து விவசாய காணியினை பார்வையிடுவதற்காக மெனிக்பாம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது குறித்த பகுதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட நிலையில் தொடருந்துடன் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பறையனாலங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam