கிளிநொச்சி இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ - 9 வீதி இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று(23.08.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று அந்தப் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்றபோது வீதியால் சென்ற ஒருவர் திடீரென பேருந்தை வழிமறித்து ஏற முற்பட்ட வேளை பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
