தலவாக்கலையில் 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தலவாக்கலை - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் 10 வயது சிறுவனை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவனின் சிறிய தாயை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்றைய தினம் (24) நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
மேலும், குறித்த பெண்ணை மனோதத்துவ வைத்தியரின் பரிசோதனைக்கு உட்படுத்தி, அப்பரிசோதனை அறிக்கையையும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளான சிறுவனின் பெற்றோர் கொழும்பிற்கு தொழில் நிமித்தம் சென்ற நிலையில், தாயின் தங்கையிடம் (சிறிய தாய்) சிறுவனை விட்டுச்சென்றுள்ளனர்.
இதன்போது ஐந்து மாத கர்ப்பிணியான சிறிய தாய் சிறுவனை அடித்து, நெருப்பினால் சூடுவைத்து சித்திரவதை செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
