வவுனியா - செட்டிகுள வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
வவுனியா - செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (25.01.2023) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் தட்டாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியுள்ளது.

பொலிஸார் விசராணை
இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்.
சம்பவத்தில் ரங்கெத்கம பகுதியை சேர்ந்த நந்தன கிருசாந்த வயது 41 என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசராணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம்..! 9 மணி நேரம் முன்
இந்தியப் பங்குச்சந்தையை உலுக்கிய ரூ 15 லட்சம் கோடி மோசடி: சிக்கிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் News Lankasri