மோட்டார் சைக்கிள் விபத்தில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு
வாகல்கட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகல்கட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய திருமணமான இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது வீதியின் குறுக்கே எருமை மாடு ஒன்று மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தின் போது, கன்றை வயிற்றில் சுமந்திருந்த எருமை மாடு உயிரிழந்த நிலையில், மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த நிமேஷ் ருக்ஷான் ரட்சரவின் மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகல்கட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
