அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
அம்பாறையில்(Ampara) உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை - அம்பாறை பகுதியில் நேற்று(05.10.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சம்மாந்துறை விளினியடி 03 பகுதியை சேர்ந்த 64 வயதுடைய அசனார் முகம்மட் இஸ்மாயில் என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அம்பாறை வைத்தியசாலை
அத்துடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, உழவு இயந்திரத்துடன் மோதிய கனரக வாகனத்தின் சாரதி சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
