மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!
மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லவெடிய பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கம்
உயிரிழந்த 27 வயதுடைய இளைஞர்,புல்வெட்டும் இயந்திரத்தைப் பராமரித்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri