நிதி மோசடி வழக்கில் திலினி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!
பல கோடி ரூபா நிதி மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, கைப்பேசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரிடம் 4 கோடி ரூபா நிதியை மோசடி செய்துள்ளார் என மேலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
திலினி பிரியமாலியின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தன ஊடாக குறித்த வர்த்தகர் திலினி பிரியமாலியை கடந்த மே மாதம் அறிந்துகொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
டொலர் கொடுக்கல் வாங்கல்
தமக்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஐ-போன் 13 ப்ரோ மெக்ஸ் ரக கைப்பேசி ஒன்று தேவைப்படுகின்றது என ஜானகி சிறிவர்தன மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்கு அமைய, குறித்த வர்த்தகர் கொழும்பு - கோட்டை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
அந்த கைபேசியை ஜானகி சிறிவர்தனவிடம் கையளிக்கும் சந்தர்ப்பத்தில், திலினி பிரியமாலி மற்றுமொரு நபருடன் டொலர் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்ததை வர்த்தகர் அவதானித்துள்ளார்.
அப்போது, வர்த்தகத்துக்கு டொலர் தேவைப்படுமாயின் திலினி பிரியமாலியை அணுக முடியும் எனக்கூறி ஜானகி சிறிவர்தன அந்த வர்த்தகருக்கு திலினி பிரியமாலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
6 வருடகாலமாக திலினி பிரியமாலியைத் தாம் அறிந்துள்ளதாகவும் அவருடனான வர்த்தகம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஜானகி சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, அந்த வர்த்தகர் 4 கோடி ரூபாவை திலினி பிரியமாலியுடனான வர்த்தகத்துக்கு வழங்கியுள்ளார்.
பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதி
வழங்கிய 4 கோடி ரூபாவுக்கான டொலரை கடந்த மே மாதம் 9ஆம் திகதி தருவதாக உறுதியளித்துள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக அதனை வழங்க முடியாதுள்ளது என திலினி பிரியமாலியும், ஜானகி சிறிவர்தனவும் வர்த்தகருக்கு அறிவித்துள்ளனர்.
பல சந்தர்ப்பங்களில் டொலரை வழங்குமாறு கோரி வர்த்தகர், திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் அலுவலகங்களுக்குச் சென்ற போதிலும் அது பலனளிக்கவில்லை.
எவ்வாறாயினும், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அந்த வர்த்தகரிடம் ஜானகி சிறிவர்தன ஐபோன்-13 ப்ரோ மெக்ஸ் ரக 4 கைப்பேசிகளை கோரியிருந்ததுடன், அதனைப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே அதற்கான பணத்தை வழங்கியுள்ளார் என்று குறிப்பிடப்படுகின்றது.
அவர் கைப்பேசிகளை திலினி பிரியமாலியின் ஆண் நண்பர் எனக் கூறப்படும் இசுறு பண்டார மற்றும் பொரள்ளை சிறிசுமன தேரருக்கு வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அந்தச் சந்தர்ப்பத்தில் கைப்பேசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகரின் பிரச்சினையை தான் தீர்த்து வைப்பதாக பொரள்ளை
சிறிசுமன தேரர் உறுதியளித்துள்ளார்.
4 கோடி ரூபா பணத்துக்குப் பதிலாக தங்க கோலை பெற்றுக்கொள்ளுமாறு கூறிய நிலையில், அதனை பெற்றுக்கொள்ள வர்த்தகர் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
