திருக்கோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி ஒருவர் பலி (Photos)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்று மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த சாஹுல் ஹமீட் வயது(76) வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கந்தளாய் பேராறு பகுதியில் தனது காணிக்குள் மண் இட்டு செப்பனிட்டு வந்துள்ளார்.
இவ்வேளையில் இன்றைய தினம் உடைந்த கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று காணிக்குள் களி மண்களை கொட்டுவதற்காக பின்பக்கமாக செலுத்திய வேளை டயருக்குள் இறுகி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan