மன்னாரில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயம்
மன்னார் - மடு பிரமனாலங்குளம் பகுதியில் வவுனியா - செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த பாண் வியாபாரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு பிரமனாலங்குளம் - பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

செட்டிகுளம் - மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பாண் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி பிரமனாலங்குளம் வழியாக மடு சென்ற போது சந்தியிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan