சிவனொளிபாத மலையில் கடும் குளிர் காரணமாக ஒருவர் மரணம்
சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற வயோதிபர் ஒருவர் கடும் குளிர் காரணமாக மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (08.12.2022) சிவனொளிபாத மலை உச்சியில் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
வயோதிபர் கடும் குளிர் காரணமாக இறந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவரது சடலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக விசாரணைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 96 வயது மதிக்கத்தக்க கரோலிஸ் அப்புஹாமி இமதுவ காலி பகுதியைச் சேர்ந்தவர் என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.