வவுனியாவில் யானை தாக்கியதில் ஒருவர் மரணம்
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (17.03.2024) செட்டிகுளம், மருதமடுப் பகுதியில் மாலை வீதியால் பயணித்த முதியவர் ஒருவரை அந்த பகுதிக்கு வந்த யானை தாக்கியுள்ளது.
மேலதிக விசாரணை
இதனால் படுகாயமடைந்த குறித்த முதியவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
செட்டிகுளம், மருதமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய தனபாலகே அனுர தென்னக்கோன் என்பவரே மரணமடைந்தவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |