வெடுக்குநாறிமலையை பார்வையிடவுள்ள கருணா
வெடுக்குநாறிமலைக்கு நேரடி களவிஜயம் மேற்கொண்டு அங்குள்ள களநிலவரங்களை கருணா ஆராயவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.
பிரத்தியேகமாக வழங்கப்பட்ட செவ்வி ஒன்றின் போது தற்போது நடைபெறும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை? என வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எங்களுடைய கலாச்சார விடயங்கள் பூமியில் சீரழிக்கப்படும் போது எமது பங்கு அதிகம் இருக்கின்றது. கடந்த வாரமும் வெடுக்குநாறிமலை தொடர்பாக கண்டன அறிக்கையினை நாம் வெளியிட்டிருந்தோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி எதிர்வரும் வாரத்தில் எங்களுடைய தலைவர் கருணாம்மான் நேரடி களவிஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri