யாழ்.போதனா வைத்தியசாலையில் போதைப்பொருளுடன் சிக்கிய நபர் கைது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (20.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை காவலாளிகள் பரிசோதித்த போது கஞ்சா கலந்த பீடி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |