கிரானில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது
மட்டக்களப்பு - கிரான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் வீடொன்றில் உற்பத்தி செய்யப்பட்ட 50 லீற்றர் கசிப்பு மற்றும் 40 லீற்றர் கோடாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் கிடைக்கப் பெற்ற தகவலொன்றையடுத்து கிரானிலுள்ள குறித்த வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கசிப்பினைக் கைப்பற்றியதுடன் சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பெருமளவு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைதான நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam