ஒமிக்ரோன் பரவலை அடுத்து நாட்டு எல்லைகளை மூடிய இஸ்ரேல்
ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இஸ்ரேல் தனது நாட்டு எல்லைகளை மூடியுள்ளது. அத்துடன் வெளிநாட்டவர்கள் தமது நாட்டுக்குள் வரவும் அந்நாடு தடைவிதித்துள்ளது.
இந்த தடையானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதுடன் அமைச்சரவையும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்தது 14 நாட்களுக்கு இந்த தடை நடைமுறைப்படுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பெனட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் இத்தாலியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மொசம்பிக் நாட்டில் இருந்து இத்தாலியின் மிலான் நகருக்கு வந்தவர் என தெரியவந்துள்ளது.
ஆபிரிக்க பிராந்தியத்தில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் திரிபு மிக சக்தி வாய்ந்த வைரஸ் திரிபு என்பதுடன் இது உலக நாடுகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam